எரித்திரியாவில் புலிகளின் 10 சிறிய ரக விமானங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக விமானங்கள் கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள நாளேடான “லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விமானங்களை பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய விமான நிலையத் தரப்பு மேற்கொண்டு வருவதாகவும், இந்த விமான நிலையத்தை நிர்வகித்துவரும் நிறுவனம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மலேசியாவில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதனை விசாரணைக்கு உட்படுத்தியபோது இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
(நன்றி : வீரகேசரி)